World News
கீவ்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திடீர் பயணமாக உக்ரைன் தலைநகர் கீவ் சென்று, அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ரூ.4,135 கோடி மதிப்புள்ள ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்குவதாக அவர் உறுதி அளித்தார்.
உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் கடந்த ஆண்டு பிப்.24-ம் தேதி தாக்குதலை தொடங்கியது. இரு நாடுகள் இடையிலான போர் ஓராண்டை நெருங்குகிறது. இந்த சூழலில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைனின் அண்டை நாடான போலந்தில் பிப்.20,21, 22-ம் தேதிகளில் சுற்றுப் பயணம்செய்வார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அவர் உக்ரைன் செல்வாரா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, அமெரிக்க அதிபர் மாளிகை திட்டவட்டமாக மறுத்தது.
Comments
Post a Comment