World News
கீவ்: உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஓராண்டு நிறைவடையும் நிலையில், உக்ரைன் நாட்டுக்கு திடீர் பயணம் மேற்கொண்டு உலகையே, குறிப்பாக ரஷ்யாவை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.
ரஷ்யா தனது தாக்குதலை தீவிரப்படுத்த வியூகம் வகுக்கும் சூழலில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்த திடீர் பயணத்தை மேற்கொண்டுள்ளார். 3 மாதங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைனுக்கு ஒருமுறையாவது நேரில் வந்து நிலவரத்தை அருகிலிருந்து அறிந்து கொள்ள வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்திருந்தார்.
Comments
Post a Comment