Sports in Tamil
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக வரும் மார்ச் 1-ம் தேதி தொடங்கவுள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு காரணம் என்ன என்பதை அலசுவோம்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் கே.எல்.ராகுல் இடம் பெற்றுள்ளார். இதே தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு அவர் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டார். இந்தச் சூழலில் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் அவர் துணை கேப்டனாக செயல்படுவாரா என்ற அறிவிப்பை பிசிசிஐ வெளியிடவில்லை. அது குறித்த முடிவை கேப்டன் ரோகித் சர்மா எடுப்பார் எனத் தகவல்.
Comments
Post a Comment