Sports in Tamil
ராஞ்சி: நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி நாளை விளையாடுகிறது. இந்தப் போட்டி ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சி நகரில் அமைந்துள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் சொந்த ஊர். இந்நிலையில், பயிற்சியில் ஈடுபட்டு இருந்த இந்திய வீரர்களுடன் தோனி நீண்ட நேரம் பேசியுள்ளார்.
அந்த வீடியோவை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பகிர்ந்துள்ளது. நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. 3-0 என்ற கணக்கில் இந்தியா ஒருநாள் தொடரை வென்ற நிலையில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை தொடங்குகிறது.
Comments
Post a Comment