Sports in Tamil

அகமதாபாத்: இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி இன்று அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியை வெல்லும் அணி தொடரைக் கைப்பற்றும் என்பதால் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

நியூஸிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையே தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. ராஞ்சியில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் நியூஸிலாந்து அணியும், லக்னோவில் நடைபெற்ற 2-வது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றன. இதனால் தொடர்
தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

Comments

Popular posts from this blog

World News

World News

World News