World News
"இந்தப் போருக்கு இடையே பிறந்த குழந்தைகளை பயத்தில் உறைந்த சமூகம்தான் வரவேற்கிறது. இங்கே பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் அமைதி என்றால் என்னவென்று தெரியாமல் உள்ளனர்"
உக்ரைன் மீது ரஷ்யா போரைத் தொடங்கி இன்று 310-வது நாள். கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. வெறும் ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் தான் தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டது. க்ரெம்ளினில் இருந்து வந்த தகவலில் இது ஒரு சிறப்பு ராணுவ நடவடிக்கை என்றே கூறப்பட்டது. ஆனால், ரஷ்யா முன்னேறிய வேகம் உலக நாடுகளை பிரம்மிக்க வைத்தது. நேட்டோ நாடுகளிடம் குறிப்பாக அமெரிக்காவிடம் உதவி கோரிய ஜெலன்ஸ்கி இன்று வரை போரை எதிர்கொண்டு வருகிறார். ஆனால் அதன் பக்கவாட்டு விளைவுகள்தான் உண்மையிலேயே இது போர்களுக்கான காலம் இல்லை என்பதை அன்றாடமும் உணர்த்தி வருகிறது.
Comments
Post a Comment