World News
பெய்ஜிங்: ஜனவரி 8-ம் தேதி முதல் சர்வதேச பயணிகளுக்கான தனிமைப்படுத்துதலை ரத்து செய்யப்போவதாகவும், சர்வதேச எல்லைகளை மீண்டும் திறக்கப்போவதாகவும் சீன அரசு அறிவித்து உள்ளது. சீனாவில் வூஹான் நகரில் 2019-ல் உருவான கரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் பரவி லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் இந்த வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் சீனாவில் மீண்டும் கரோனா வைரஸ் அதிகரித்து வருகிறது. அங்கு நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருவதாகத் தெரியவந்துள்ளது. இதனால் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை சீனாவிதித்தது. எல்லைகள் மூடப்பட்டநிலையில், கரோனா வைரஸ்தொற்று பாதிப்பை அந்நாட்டு அரசு சுகாதாரப் பட்டியலில் ‘‘ஏ’’ பிரிவில் வைத்திருந்தது.கடந்த 3 ஆண்டுகளாக இந்த நிலை நீடித்து வந்தது.
Comments
Post a Comment