World News

வாடிகன்: கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமை மத குருவாக இருந்த பெனடிக்ட் காலமானார். அவருக்கு வயது 95.

ஜெர்மனியின் பவேரியா மாகாணத்தில் உள்ள மார்க்டி என்ற கிராமத்தில் 1927ம் ஆண்டு ஏப்ரல் 16-ம் தேதி பிறந்தவர் பெனடிக்ட். இவரது இயற்பெயர் ஜோசப் அலாய்சியஸ் ரட்சிங்கர். கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தில் தீவிர ஈடுபாடு கொண்ட இவர், அந்த மதத்தின் முக்கிய பொறுப்புகள் பலவற்றை வகித்தவர். ஆர்ச் பிஷப், கார்டினல் ப்ரீஸ்ட், கார்டினல் பிஷப், கார்டினல் என பல்வேறு பதவிகளை வகித்த ஜோசப் அலாய்சியஸ் ரட்சிங்கர், கடந்த 2005ம் ஆண்டு ஏப்ரல் 19ம் தேதி போப் ஆக பொறுப்பேற்றார்.

Comments

Popular posts from this blog

World News

World News

World News