World News
நிகோசியா: "பயங்கரவாததின் மூலம் இந்தியாவை ஒரு போதும் பேச்சுவார்த்தைக்கு கட்டாயப்படுத்த முடியாது" என்று அண்டை நாடுகளுக்கு மறைமுகமாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் வெள்ளிக்கிழமை எச்சரிக்கை விடுத்தார்.
சைப்ரஸ் நாட்டில் வாழும் புலம்பெயர்ந்த இந்தியர்களுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வெள்ளிக்கிழமை கலந்துரையாடல் நடத்தினார். அப்போது அவர் இந்தியாவின் அண்டை நாடுகளின் பெயர்களைக் குறிப்பிடாமல் அவர்களின் பயங்கரவாத செயல்களைக் கண்டித்தார். கலந்துரையாடல்களின் போது அமைச்சர் பேசியதாவது: "பயங்கரவாதத்தின் மூலமாக யாரும் இந்தியாவை பேச்சுவார்த்தைக்கு கட்டாயப்படுத்த முடியாது. அதனை நாம் ஏற்றுக்கொள்ளவும் முடியாது. இந்தியா அனைவருடனும் சுமூகமான உறவைப் பேணுவதற்கே விரும்புகிறது. ஆனால் அதற்காக, சுமூகமான உறவு என்பதற்கு மன்னித்துக் கொண்டே இருப்பது அல்லது விலகி நின்று பயங்கரவாதத்தை வேடிக்கை பார்ப்பது என்று அர்த்தம் கிடையாது. இதில் இந்தியா தெளிவாக உள்ளது.
Comments
Post a Comment