Sports in Tamil

டேராடூன்: கார் ஓட்டுவது குறித்து இந்திய அணி வீரர் ரிஷப் பந்த்துக்கு மூத்த வீரர் ஷிகர் தவான் அறிவுரை கூறும் வீடியோ வைரலாகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் இன்று அதிகாலை டெல்லியிலிருந்து உத்தராகண்ட்டிற்கு தன் காரில் செல்லும்போது கோரமான விபத்தில் சிக்கினார். தனது மெர்சிடஸ் காரை ஓட்டிக் கொண்டு உத்தராகண்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது ரூர்கி அருகே அவரது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி சாலைத் தடுப்பில் மோதித் தீப்பிடித்து எரிந்தது. எரியும் காரிலிருந்து முன்-கண்ணாடியை உடைத்துத் தீக்காயங்களுடன் தப்பியுள்ளார். எனினும், அவர் தலை, கால்கள் மற்றும் முதுகில் படுகாயங்கள் ஏற்பட்டன. அவருக்கு மேற்கொள்ளப்பட்ட எம்ஆர்ஐ ஸ்கேன் பரிசோதனையின் முடிவு வெளியாகி உள்ளது. அதில் அவரது மூளை மற்றும் முதுகுத்தண்டு நார்மலாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Comments

Popular posts from this blog

World News

World News

World News