Sports in Tamil

வங்கதேச அணிக்கு எதிரான மிர்பூர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வியின் பிடியில் சிக்கியிருந்த தருணம். கணிக்க முடியாமல் அமைந்த ஆடுகளத்தில் பந்துகள் பெரும்பாலும் தாழ்வாகவும், மோசமாகவும் வந்து கொண்டிருந்ததால் இந்திய அணி 74 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது. முன்னணி பேட்ஸ்மேன்கள் பலர் ஆட்டமிழந்து தங்களது இருக்கைக்கு திரும்பிவிட்டனர். இலக்கு 145 ரன்களே என்ற போதிலும் அது சாத்தியம் இல்லாதது, வெகுதொலைவில் இருப்பது போன்ற உணர்வை பார்வையாளர்கள் மத்தியில் கடத்தியது. அப்போதுதான் ரவிச்சந்திரன் அஸ்வின், ஸ்ரேயஸ் ஐயருடன் இணைந்தார். இவர்கள் இருவரும்தான் அணியில் இருந்த கடைசி பேட்ஸ்மேன்கள். இவர்களுக்கு பின்னால் டெய்லெண்டர்கள் உமேஷ் யாதவ், மொகமது சிராஜ் ஆகியோர் மட்டுமே.

சென்னையைச் சேர்ந்த 36 வயதான ஆல்ரவுண்டரான அஸ்வின் தனது சிறப்புமிக்க 88 டெஸ்ட் போட்டிகளில் 5 சதங்கள் அடித்துள்ளார். இம்முறை அவர் சதம் அடிக்கவில்லை. ஏன் அரை சதம் கூட எட்டவில்லை. இருப்பினும் மிர்பூர் டெஸ்டின் கடைசி நாளில் அஸ்வின் சேர்த்த 42 ரன்கள் அதனினும் பெரிது.

Comments

Popular posts from this blog

World News

World News

World News