Sports in Tamil

பாரிஸ்: கால்பந்து உலகக் கோப்பை தொடர் முடிந்த நிலையில், பிரான்ஸ் நாட்டில் லீக் 1 தொடர் மீண்டும் துவங்கி உள்ளது. இந்தத் தொடரில் பிஎஸ்ஜி கிளப் அணிக்காக விளையாடும் நெய்மர் மற்றும் எம்பாப்பே என இருவரும் களத்திற்கு திரும்பியுள்ளனர். வரும் ஜனவரியில் இதே அணியில் மெஸ்ஸி இணைய உள்ளதாக தகவல்.

இந்தச் சூழலில் நேற்று ஸ்ட்ராஸ்பேர்க் அணியுடன் பிஎஸ்ஜி அணி விளையாடியது. இந்தப் போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது பிஎஸ்ஜி. எம்பாப்பே உட்பட அந்த அணி சார்பில் இரண்டு பேர் கோல் பதிவு செய்திருந்தனர். இந்தப் போட்டியில் ரெட் கார்டு வாங்கி வெளியேறினார் நட்சத்திர ஆட்டக்காரர் நெய்மர்.

Comments

Popular posts from this blog

World News

World News

World News