Sports in Tamil
தோகா: 22-வது பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் கத்தார் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நள்ளிரவு மைதானம் 974ல் நடைபெற்ற குரூப் எச் பிரிவு லீக் ஆட்டத்தில் போர்ச்சுகல், கானா அணிகள் மோதின.
முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்காமல் வறட்சியாக செல்ல 65-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பில் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடித்து இந்த உலகக் கோப்பையில் அணிக்கான முதல் கோலை பதிவு செய்தார். இன்று கோல் அடித்ததன்மூலம் 5 உலகக் கோப்பை தொடரில் கோல் பதிவு செய்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார் ரொனால்டோ.
Comments
Post a Comment