Sports in Tamil

கத்தாரில் நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் வெள்ளிக்கிழமை அமெரிக்க அணியுடன் மோதிய இங்கிலாந்து அணி 0-0 என்று, ஒரு கோல் கூட போட முடியாமல் டிரா செய்திருப்பது இங்கிலாந்து ரசிகர்களையும் முன்னாள் வீரர்களையும் கடும் அதிருப்திக்கும், விமர்சனத்திற்கும் தூண்டியுள்ளது. ஈரானுக்கு எதிராக 6 கோல்கள் அடித்து வென்று விட்டு, அமெரிக்காவுக்கு எதிராக ஒரு கோல் கூட அடிக்க முடியாமல் போனதன் மூலம் இங்கிலாந்து, எங்கு தன் ‘பழைய’ கோல் இல்லா “ஃபார்முக்கு” வந்து விட்டதோ என்ற ஐயத்தை எழுப்பியுள்ளது.

அதாவது, அமெரிக்க வீரர்கள், இங்கிலாந்து அணியின் மீது ஆதிக்கம் செலுத்தினார்கள் என்பதே உண்மை. ஆனால், இவர்களாலும் கோல் அடிக்க முடியவில்லை. அது அந்த அணியின் அனுபவமின்மை, பெரிய போட்டிகளில் ஆடிய பயிற்சியின்மையின் விளைவு என்று ஒரு காரணத்தைக் கூற முடியும். அப்படியென்றால் ஆண்டு முழுதும் நாள்தோறும் எங்காவது லீக்குகளில் கால்பந்துடனேயே புழங்கி வரும் இங்கிலாந்து வீரர்கள் ஒரு கோல் அடிக்க முடியாததையும், அமெரிக்க கோல் கீப்பர் கைக்கே ஷாட்களை அடித்ததையும், புரிந்து கொள்ள ஒரே வழி ‘இங்கிலாந்து மீண்டும் தன் ஃபார்முக்கு வந்து விட்டது’ என்ற கேலிப் பார்வையைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?

Comments

Popular posts from this blog

World News

World News

World News