World News

சியோல்: தென் கொரிய தலைநகர் சியோலில் நடைபெற்ற ஹாலோவீன் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 151 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

கிறிஸ்தவ மதத்தில் புனிதர்களாகக் கருதப்படுபவர்களுக்கான தினமாக அக்டோபர் 31ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்த தினத்தை ஒட்டி கிறிஸ்தவர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபடுவது வழக்கம். ஹாலோஸ் ஈவ் என்ற இந்த கொண்டாட்டம் சியோலின் மத்தியில் உள்ள இதேவோன் மாவட்டத்தில் நேற்றிரவு கொண்டாடப்பட்டது. குறுகிய தெருக்கள் நிறைந்த இந்த பகுதியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் தெருக்களில் கூடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 151 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பலர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 270 பேர் காணாமல் போனதாகக் கூறப்படுவதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

Comments

Popular posts from this blog

World News

World News

World News