World News
கடந்த 1971-ம் ஆண்டில் ரிஷி சுனக்கின் தந்தை யாஷ் மற்றும் அவரது தாத்தா ராம்தாஸ் சுனக் ஆகியோர் இணைந்து தென்மேற்கு லண்டனின் சவுதாம்டன் நகரில் இந்து கோயில் ஒன்றை கட்டியுள்ளனர். ரிஷி சுனக் இந்த கோயிலுக்கு சென்று உதவிகள் செய்வதை வழக்கமாகக் கொண்டவர். இந்த கோயிலின் தலைவர் சஞ்சய் சந்தரனா கூறியிருப்பதாவது:
இங்கிலாந்து வரலாற்றில் வெள்ளை இனத்தை சாராத ஒருவர் பிரதமராக பதவியேற்பது இதுவே முதல் முறை. கருப்பினத்தைச் சார்ந்த பராக் ஒபாமா அமெரிக்க அதிபராகி சாதனை படைத்தது போலவே இதுவும் வரலாற்று சிறப்பு வாய்ந்த தருணமாகும். அதேபோன்று, இந்திய வம்சாவளி பின்புலத்துடன் இந்து ஒருவர் இங்கிலாந்து பிரதமராகி சாதனை படைப்பதும் இதுவே முதல் முறை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Comments
Post a Comment