World News
ரியோ: பிரேசில் அதிபர் தேர்தலில் இடதுசாரி தலைவரான லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா வெற்றி பெற்றிருக்கிறார். இதன்மூலம் பெரிதும் விமர்சிக்கப்பட்டு வந்த வலதுசாரி தலைவர் ஜெயிர் போல்சோனாரோவின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.
யூனியன் தலைவராக இருந்த லுலா டா சில்வா பிரேசிலின் அதிபராக 2003 மற்றும் 2010-ஆம் ஆண்டுகளில் பதவி வகித்தவர். இந்த நிலையில், 2022-ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் போல்சோனாரோவை வெற்றிகொண்டு மூன்றாவது முறையாக தற்போது லுலா டா சில்வா அதிபராகிறார். அதிபர் தேர்தலில் அவருக்கு 50.9% வாக்குகள் கிடைத்தன. போல்சோனாரோவுக்கு 49.1% வாக்குகள் கிடைத்தன.
Comments
Post a Comment