Sports in Tamil
பாரிஸ்: கால்பந்தாட்ட உலகின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான லயோனல் மெஸ்ஸி, கோல் போஸ்ட்டில் இருந்து சுமார் 35 யார்டுகளுக்கு வெளியே நின்றபடி பந்தை ஷூட் செய்து, அபாரமான லாங்க்-ரேஞ்ச் கோலை பதிவு செய்தார். அதை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியத்தில் மூழ்கி உள்ளனர். பிஎஸ்ஜி அணிக்காக அவர் இந்த கோலை இன்று (சனிக்கிழமை) பதிவு செய்திருந்தார்.
35 வயதான மெஸ்ஸி, அர்ஜென்டினாவை சேர்ந்தவர். கடந்த 2005 முதல் தன் தேசிய அணிக்காக சர்வதேச களத்தில் விளையாடி வருகிறார். இது தவிர உலக அளவில் பிரசித்தி பெற்ற கிளப் அணிகளுக்காகவும் விளையாடி வருகிறார்.
Comments
Post a Comment