Sports in Tamil
மெல்போர்ன்: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கோலாகலமாக நடைபெற்றது. இந்தச் சூழலில் இரு நாட்டு அணியின் பெண் ரசிகர்கள் இணைந்து போட்டோவுக்கு முகமலர்ச்சியுடன் உற்சாக போஸ் கொடுத்துள்ளனர். அது சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.
மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் சுமார் 90,293 ரசிகர்களுக்கு முன்னிலையில் இரு அணிகளும் இந்த போட்டியில் பலப்பரீட்சை செய்தன. அதில் இந்திய கிரிக்கெட் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய வீரர் விராட் கோலி 53 பந்துகளில் 82 ரன்களை விளாசி இருந்தார். அவரது ஆட்டத்தை கிரிக்கெட் வல்லுனர்கள், முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள், ரசிகர்கள் என பலரும் உச்சி முகர்ந்து பாராட்டி வருகின்றனர்.
Comments
Post a Comment