Sports in Tamil
பாகிஸ்தான் அணி அன்று ஜிம்பாப்வேயிடம் கடைசி பந்தில் தோல்வி அடைந்து 130 ரன்கள் இலக்கைக் கூட எட்ட முடியாமல் கோட்டைவிட்டது குறித்து போட்டிக்குப் பிறகான ஊடகங்கள் சிலவற்றின் சித்திரம், ஜிம்பாப்வேயிடம் தோற்பது ஏதோ உலகிலேயே பெரிய அசிங்கம் என்றும், பாகிஸ்தான் அசிங்கப்பட்டுவிட்டது என்றும் பாகிஸ்தான் ஊடகங்கள் உட்பட பல ஊடகங்கள் எழுதின. ஜிம்பாப்வேயிடம் தோற்பது என்ன அசிங்கமா என்ற கேள்வி நமக்கு எழுவது இயல்பே.
ஜிம்பாப்வே கிரிக்கெட்டை இந்த நிலைமைக்கு சீரழித்தது ஐசிசியில் உறுப்பினர்களான சில பணக்கார கிரிக்கெட் வாரியங்கள் மீதான ஐசிசியின் சார்பே. அதாவது ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பிசிசிஐ போன்ற பண பலம் மிகுந்த வாரியங்களின் ஐசிசி மீதான செல்வாக்கினால் ஜிம்பாப்வே கிரிக்கெட் சிறுகச் சிறுக அழிந்தது. இது 50% காரணம் என்றால், அந்நாட்டின் உள்நாட்டு அரசியல் சூழ்நிலைகளும் பெரிய காரணமாகிவிட்டது.
Comments
Post a Comment