World News
தெஹ்ரான்: ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டத்தைக் கட்டுப்படுத்த சமூக வலைதளங்கள் முடக்கப்பட்ட நிலையில், ஈரானில் தனது ஸ்டார்லிங்க் செயற்கைகோள் இணைய சேவையை வழங்கும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
ஈரானில் கடந்த 8 நாட்களாக ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டம் தொடர்ந்து தீவிரமாக நடந்து வருகிறது. ஈரானில் 80 நகரங்களில் கட்டாய ஹிஜாப்புக்கு எதிரான போராட்டம் இரவு பகலாக தொடர்கிறது. போராட்டத்தில் இளம் பெண்கள், இளைஞர்கள் என அனைவரும் பங்கேற்றுள்ளனர். இதுவரை இப்போராட்டத்தில் 50 பேர் உயிரிழந்துள்ளனர்.
Comments
Post a Comment