Sports in Tamil
ஹைதராபாத்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது இந்திய கிரிக்கெட் அணி. மூன்றாவது டி20 போட்டியில் 187 ரன்கள் இலக்கை விரட்டி கோப்பையை வென்றுள்ளது இந்தியா. இந்த வெற்றி உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக சிறப்பானதொரு வெற்றியாக இந்தியாவுக்கு அமைந்துள்ளது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா தலா ஒரு வெற்றியை பெற்று தொடரை 1-1 என சமன் செய்தன. இந்நிலையில், மூன்றாவது டி20 போட்டி இன்று (செப்டம்பர் 25) ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
Comments
Post a Comment