Sports in Tamil
சென்னை: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து இந்திய கிரிக்கெட் வீரர் தீபக் ஹூடா விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் இந்திய அணிக்கான டி20 உலகக் கோப்பை தொடரிலும் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
27 வயதான தீபகே ஹூடா, இந்திய அணிக்காக 12 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். 9 இன்னிங்ஸில் பேட் செய்து 293 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ஒரு சதமும் அடங்கும். இந்திய அணியின் ஆடும் லெவனில் இடம் பிடிப்பதற்கான போட்டியில் இவரும் ஒருவராக உள்ளார். ஆஃப் பிரேக் பவுலரும் கூட.
Comments
Post a Comment