World News
வாஷிங்டன்: அமெரிக்காவில் வசித்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நான்கு பெண்களிடம் "அமெரிக்காவில் எங்கு சென்றாலும் நீங்கள்தான் (இந்தியர்கள்) இருக்கிறீர்கள்- இந்தியாவுக்கு திரும்ப ஓடுங்கள்" என மெக்ஸிகன்-அமெரிக்கன் பெண் இனவெறியுடன் பேசி அவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரீமா ரசூல் என்ற இந்திய வம்சாவளிப் பெண் அவரது தாயார் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து கடந்த புதன்கிழமை இரவு டெக்சாஸ் மாகாணம் டல்லாஸ் நகரத்தில் உள்ள உணவு விடுதிக்கு சென்றுள்ளார். அப்போது, வாகனம் நிறுத்துவது தொடர்பாக அவர்களுக்கும் அங்கு வந்த மெக்ஸிகன்-அமெரிக்கன் பெண்ணுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
Comments
Post a Comment