World News
கொழும்பு: இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. கடன் சுமை அதிகரித்துள்ள நிலையில் அதன் அந்நிய செலாவணி கையிருப்பு வெகுவாக குறைந்துள்ளது.
இலங்கை அதன் பெருவாரியான தேவையை இறக்குமதி வழியே நிறைவேற்றி வந்த நிலையில், அந்நிய செலாவணி இருப்பு குறைந்ததால் எரிபொருள், மருந்துகள், உணவு உட்பட அத்தியாவசியப் பொருட்களைக் கூட இறக்குமதி செய்ய முடியாத நிலைக்கு உள்ளானது. இந்தியா உட்பட அண்டை நாடுகளிடம் உதவி பெற்றே அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்து வருகிறது. இந்நிலையில், சாக்லேட், முகப்பூச்சு, வாசனை திரவியம், ஷாம்பூ உட்பட 300 வகையான நுகர்வுப் பொருட்களை இறக்குமதி செய்ய இலங்கை அரசு தடை விதித்துள்ளது.
Comments
Post a Comment