World News
கோலாலம்பூர்: மலேசிய பிரதமராக இருந்தவர் நஜிப் ரசாக். இவர் பிரதமராக இருந்த காலத்தில், அந்நாட்டின் அரசு முதலீட்டு நிதி அமைப்பான 1 எம்.டி.பி. நிறுவனத்தில் ரூ.4,500 கோடி அளவுக்கு ஊழல் செய்ததாக பரபரப்பான குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக அவருக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்களில் மலேசிய ஊழல் தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தி ஏராளமான நகை, ரொக்கத்தை கைப்பற்றினர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நஜிப் ரசாக் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதையடுத்து அவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
Comments
Post a Comment