World News
கொழும்பு: இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால், அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டனர். வெளிநாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதற்கான அந்நிய செலாவணியும் இலங்கையிடம் இல்லை.
இதனால், உணவுப் பொருட்கள், எரிபொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்தது. உணவு தட்டுப்பாடு ஏற்பட்டதால் மக்கள் பெரும் போராட்டம் நடத்தினர். இதையடுத்து அதிபர் கோத்தபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் பதவியை ராஜினாமா செய்தனர்.
Comments
Post a Comment