Sports in Tamil

டோக்கியோ: உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரனாய் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். மேலும் ஆடவர் இரட்டையர் பிரிவில் 2 இந்திய ஜோடிகள் கால் இறுதி சுற்றில் நுழைந்தன. அதேவேளையில் மகளிர் பிரிவில் சாய்னா நெவால் தோல்வியடைந்தார்.

ஜப்பானின் டோக்கியோ நகரில் உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரனாய், சகநாட்டைச் சேர்ந்த காமன்வெல்த் சாம்பியனான லக்சயா செனை எதிர்த்து விளையாடினார். ஒரு மணி நேரம் 15 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஹெச்.எஸ்.பிரனாய் 17-21, 21-16, 21-17 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றில் கால்பதித்தார். கால் இறுதியில் பிரனாய், சீனாவின் ஜாவோ ஜுன் பெங்கை எதிர்கொள்கிறார்.

Comments

Popular posts from this blog

World News

World News

World News