Sports in Tamil
துபாய் : ஆசிய கோப்பை டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு துபாயில் நடைபெறும் ஆட்டத்தில் இந்திய அணி தனது பரமவைரியான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
நடப்பு சாம்பியனான இந்தியஅணி கோப்பையை தக்கவைத்துக்கொள்ளும் முனைப்பில் களமிறங்குகிறது. டி 20 தரவரிசையில் முதலிடம் வகிக்கும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சிறந்த பார்மிலும் உள்ளது. இந்திய அணி கடைசியாக விளையாடிய 14 டி 20 ஆட்டங்களில் 8 ஆட்டங்களில் முதலில் பேட் செய்து வெற்றி கண்டுள்ளது. பேட்டிங்கில் ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த் ஆகியோர் அதிரடியில் பலம் சேர்க்கக் கூடியவர்கள். இவர்களுடன் விராட் கோலி, கே.எல்.ராகுல் ஆகியோரும் பார்முக்கு திரும்பினால் பெரிய அளவில் இலக்கை கொடுப்பதும், விரட்டுவதும் சாத்தியமாகும்.
Comments
Post a Comment