World News
வாஷிங்டன்: உலகை அச்சுறுத்தும் கரோனா பெருந்தொற்று, ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் ஆகிய காரணங்களால் அனைத்து நாடுகளிலும் பணவீக்கம் அதிகரித்துள்ளது. அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வு, விநியோக சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்பு ஆகிய காரணங்களால் மீண்டும் பொருளாதார தேக்க நிலை ஏற்படும் என்ற பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு சரிந்தபோதிலும், இந்தியாவில் தேக்க நிலை ஏற்படுவதற்கான வாய்ப்பில்லை என்று சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதேசமயம் மிகவும் வளர்ச்சியடைந்த பொருளாதார நாடான அமெரிக்காவில் தேக்க நிலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் 40 சதவீதம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வை சர்வதேச செய்தி நிறுவனமான ‘புளூம்பெர்க்’ பல நாடுகளில் நடத்தி அதன் முடிவை வெளியிட்டுள்ளது.
Comments
Post a Comment