Sports in Tamil

பர்மிங்ஹாம்/புதுடெல்லி: பிரிட்டனின் பர்மிங்ஹாம் நகரில் நடைபெற்று வரும் 22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவுக்கு 4 பதக்கங்கள் கிடைத்துள்ளன. இந்திய வீரர்கள் சங்கேத் மகாதேவ் சர்கார் வெள்ளியும், குருராஜா வெண்கலமும், மீராபாய் சானு தங்கமும், பிந்த்யாராணி தேவி வெள்ளியும் வென்றதன் மூலம் இந்தியா பதக்கப் பட்டியலில் தனது கணக்கைத் தொடங்கியுள்ளது. பதக்கம் வென்ற வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பர்மிங்ஹாம் நகரில் கடந்த 28-ம் தேதி காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கின. பிரிட்டன் இளவரசர் சார்லஸ் போட்டியைத் தொடங்கிவைத்தார். தொடக்க நாளன்று கலை நிகழ்ச்சிகள், அணிவகுப்பு நிகழ்ச்சிகள் மட்டுமே இடம்பெற்றன.

Comments

Popular posts from this blog

World News

World News

World News