Sports in Tamil

சென்னை: 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 2-ம் நாள் ஆட்டத்திலும் இந்திய வீரர், வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தி வெற்றி கண்டனர். 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள போர் பாயிண்ட்ஸ் ரிசார்ட்டில் நடைபெற்று வருகிறது. போட்டியின் 2-வது நாளான நேற்று ஓபன் பிரிவில் இந்திய ஏ அணியானது மால்டோவாவை எதிர்த்து விளையாடியது.

இந்திய ஏ அணியில் ஹரிகிருஷ்ணா பென்டலா, அர்ஜுன் எரிகைசி, எஸ்.எல்.நாராயணன், சசிகிரண் ஆகியோர் இடம் பெற்றனர். விதித் குஜராத்திக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருந்தது. கருப்பு நிற காய்களுடன் விளையாடிய ஹரி கிருஷ்ணா, ஷிட்கோ இவானை எதிர்த்து விளையாடினார்.

Comments

Popular posts from this blog

World News

World News

World News