Sports in Tamil
ஆண்டுக்கு இரண்டு ஐபிஎல் சீசன்கள் நடக்கலாம் என கணித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி. இரு நாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டால் இது சாத்தியம் ஆகலாம் என தெரிவித்துள்ளார் அவர்.
இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் கிரிக்கெட் உலக அளவில் நடத்தப்படும் விளையாட்டு தொடர்களில் அதிக வருமானம் ஈட்டும் டாப் ஐந்து விளையாட்டுகளில் ஒன்றாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் கிரிக்கெட்டுக்கான மோகம் கூடிக் கொண்டே உள்ளது. கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற ஐபிஎல் ஒளிபரப்பு உரிமத்திற்கான ஏலத்தை அதற்கு உதாரணமாக சொல்லலாம்.
Comments
Post a Comment