Sports in Tamil
போர்ட் ஆஃப் ஸ்பெயின்: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இரண்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி. அக்சர் படேல் அதிரடியாக விளையாடி 35 பந்துகளில் 64 ரன்கள் குவித்து அசத்தினார். இந்த வெற்றியின் மூலம் தொடரை இந்திய அணி தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இப்போது பலப்பரீட்சை செய்து வருகின்றன. இந்த தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டி போர்ட் ஆஃப் ஸ்பெயின் பகுதியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
Comments
Post a Comment