Sports in Tamil
தரூபா (Tarouba): மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. 68 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தியது இந்தியா.
191 ரன்கள் இலக்கை துரத்திய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு கைல் மேயர்ஸ் முதல் ஓவரிலேயே அதிரடியான துவக்கம் கொடுத்தார். புவனேஷ்வர் குமார் ஓவரில் 11 ரன்கள் எடுத்தார். அடுத்துவந்த அர்ஷ்தீப் சிங்கின் ஓவரிலும் பவுண்டரி அடித்தார். என்றாலும் மூன்றாவது பந்திலேயே அவரை 15 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டாக்கினார் அர்ஷ்தீப். வழக்கமாக நடு வரிசையில் இறங்கும் ஜேசன் ஹோல்டர் இன்று ஒன் டவுனாக இறங்கினார். அவரை அடுத்த ஓவரிலேயே ஜடேஜா டக் அவுட் செய்தார்.
Comments
Post a Comment