World News
டமாஸ்கஸ்: சிரியாவில் அல்-கய்தாவுடன் தொடர்புடைய குழுவைச் சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர், அமெரிக்க பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டார்.
இதுகுறித்து அமெரிக்க பாதுகாப்புப் படை தரப்பில், "சிரியாவில் இட்லிப் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக அமெரிக்கப் படை தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த தேடுதல் வேட்டை, அல்-கய்தாவுடன் தொடர்புடைய குழுவின் மூத்த தலைவர்களில் ஒருவரான அபு ஹமாஸ் அல் ஏமனியை மையமாக கொண்டு இருந்தது. இந்த நிலையில், மோட்டார் சைக்கிளில் தனியாக சென்ற அபு ஹமாஸ் மீது எங்கள் படையினர் நடத்திய தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment