Sports in Tamil
பாரீஸ்: உலக வில்வித்தைப் போட்டியில் இந்திய மகளிர் அணிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. உலக வில்வித்தைப் போட்டிகள் பிரான்ஸின் பாரீஸ் நகரில் நடைபெற்று வருகின்றன. நேற்று நடைபெற்ற வில்வித்தைப் போட்டியின் இறுதிச் சுற்றில் காம்பவுண்ட் பிரிவில் இந்தியாவும், சீன தைபே அணியும் மோதின.
இந்திய அணியில் தீபிகா குமாரி, அங்கிதா பகத், சிம்ரன்ஜீத் கவுர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த சீன தைபே அணி 5-1 என்ற கணக்கில் இந்திய மகளிர் அணியை வீழ்த்தி தங்கம் வென்றது. இதையடுத்து 2-ம் இடம் பிடித்த இந்திய அணிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. - பிடிஐ
Comments
Post a Comment