Sports in Tamil
லண்டன்: போரினால் பாதிக்கப்பட்டுள்ள தன் தாய்நாட்டிற்கு ஆதரவாக நீலம் மற்றும் மஞ்சள் நிறத்திலான ரிப்பனை தனது ஆடையில் அணிந்து விம்பிள்டன் போட்டியில் விளையாடி உள்ளார் உக்ரைன் வீராங்கனை லெசியா சுரென்கோ (Lesia Tsurenko). அவருக்கு அந்த அனுமதியை வழங்கும் வகையில் ஆடை கட்டுப்பாட்டை விம்பிள்டன் நிர்வாக அமைப்பு தளர்த்தியுள்ளதாக தெரிகிறது.
டென்னிஸ் உலகின் கிராண்ட் ஸ்லாம் தொடர்களில் ஒன்று விம்பிள்டன். கடந்த 1877 முதல் நடத்தப்பட்டு வருகிறது. வழக்கமாக இந்தத் தொடரில் விளையாடும் வீரர்கள் வெள்ளை நிற ஆடையை மட்டுமே அணிந்து விளையாடுவார்கள். அது ஒரு பாரம்பரிய நடைமுறையாக பின்பற்றப்பட்டு வருகிறது. இப்போது அதுதான் லெசியா சுரென்கோவுக்காக தளர்த்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.
Comments
Post a Comment