Sports in Tamil
நெல்லை: லைக்கா கோவை கிங்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றுள்ளது திண்டுக்கல் டிராகன்ஸ் அணி. திண்டுக்கல் அணிக்காக ஹரி நிஷாந்த் மற்றும் விஷால் வைத்யா சிறப்பாக பேட் செய்திருந்தனர். அந்த அணி இமாலய இலக்கை இந்த போட்டியில் சேஸ் செய்து வென்றுள்ளது.
நடப்பு டிஎன்பிஎல் தொடர் கடந்த 23-ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடரின் ஐந்தாவது போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் கோவை கிங்ஸ் அணிகள் ஞாயிறு (ஜூன் 26) அன்று விளையாடின. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பவுலிங் தேர்வு செய்தது. தொடர்ந்து முதலில் பேட் செய்த கோவை அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்களை எடுத்தது. 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை விரட்டியது திண்டுக்கல் அணி.
Comments
Post a Comment