Sports in Tamil
மெல்ட்வாட்டர் சாம்பியன்ஸ் செஸ் டூர் செசபிள் மாஸ்டர்ஸ் தொடரில் இந்திய கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா இரண்டாம் இடம்பிடித்துள்ளார். இறுதிப் போட்டியில் சீன வீரர் டிங் லிரனிடம் தோல்வியைத் தழுவினார்.
இணைய வழியில் நடைபெற்ற இந்தத் தொடரில் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடி வந்தார் பிரக்ஞானந்தா. அதனால், அவரது ஆட்டத்தை பலரும் வெகுவாக பாராட்டி இருந்தனர். குறிப்பாக, அவருக்கு எதிராக விளையாடியவர்களே அவரது திறனை பாராட்டியுள்ளனர். அதில் ஒருவர் சீன வீரர் டிங் லிரன். மெல்ட்வாட்டர் சாம்பியன்ஸ் செஸ் டூர் நிகழ்வின் இறுதிப் போட்டியில் விளையாடிய முதல் இந்தியர் என்ற சாதனையையும் படைத்துள்ளார் பிரக்ஞானந்தா.
Comments
Post a Comment