Sports in Tamil
அகமதாபாத்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இன்று இரவு 8 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் மோதுகின்றன.
ராஜஸ்தான் அணி 14 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. அந்த அணி அறிமுக சீசனான 2008-ல் ஷேன் வார்ன் தலைமையில் மகுடம் சூடியிருந்தது. தற்போது 2-வது முறையாக பட்டம் வெல்லும் முனைப்புடன் களமிறங்குகிறது. பேட்டிங்கில் ஜாஸ் பட்லர் அதீத பார்மில் உள்ளார். 4 சதங்கள், 4 அரை சதங்களுடன் 824 ரன்களை வேட்டையாடி உள்ள அவரிடம் இருந்து மீண்டும் ஒருமுறை உயர்மட்ட செயல்திறன் வெளிப்படக்கூடும். யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், ரியான் பராக், தேவ்தத் படிக்கல், ஷிம்ரன் ஹெட்மயர் ஆகியோரும் பேட்டிங்கில் நம்பிக்கை அளிப்பவர்களாக உள்ளனர்.
Comments
Post a Comment