World News
கொழும்பு: இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு, அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இதையடுத்து அதிபர் கோத்தபய ராஜபட்ச, அவரது மூத்த சகோதரர் பிரதமர் மகிந்த ராஜபட்ச பதவி விலகக் கோரி நாடு முழுவதும் போராட்டம் நடைபெறுகிறது.
அரசுக்கு எதிராக 1,000 தொழிற்சங்கங்கள் இணைந்து நேற்று முன்தினம் முழுஅடைப்பு போராட்டம் நடத்தின. அதிபர் கோத்தபயராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்சபதவி விலக வேண்டும். இல்லையெனில் மே 6-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்று தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
Comments
Post a Comment