World News

வாஷிங்டன்: இந்தியாவில் முதலீடு செய்யுமாறு செமிகண்டக்டர் தயாரிப்பில் ஈடுபடும் அமெரிக்க நிறுவனங்களுக்கு மத்திய நிதி அமைச்சர்நிர்மலா சீதாராமன் அழைப்பு விடுத்துள்ளார்.

சர்வதேச செலாவணி நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்திர கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அமெரிக்கா சென்றுள்ளார். இந்தியாவில் முதலீட்டு வாய்ப்பை உருவாக்கும் நோக்கில், அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளை அவர் சந்தித்துப் பேசி வருகிறார். சென்ற வாரம் ஃபெடக்ஸ், மாஸ்டர்கார்டு ஆகிய நிறுவனங்களில் சிஇஓ-க்களை சந்தித்துப் பேசினார்.

Comments

Popular posts from this blog

World News

World News

World News