World News
வாஷிங்டன்: ட்விட்டர் நிறுவனத்தின் நிர்வாகம் கைமாறும் சூழலில் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் பராக் அகர்வால் பணிநீக்கம் செய்யப்பட்டால் அவருக்கு இழப்பீடாக இந்திய ரூபாய் மதிப்பில் 300 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை எலான் மஸ்க் வழங்க வேண்டும் என தகவல் வெளியாகியுள்ளது.
ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருப்பவர் இந்தியாவில் பிறந்த பராக் அக்ரவால். மும்பை ஐஐடியில் பிடெக் பிரிவில் கம்யீட்டர் சைன்ஸ் பயின்றவர். பின்னர் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பயின்றார். அங்கேயே பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி பின் அமெரிக்க குடியுரிமை பெற்று குடியேறினார்.
Comments
Post a Comment