Sports in Tamil
மும்பை: இந்திய நாட்டின் விளையாட்டு வீரர்களின் நலனுக்காக ஜெர்சியை ஏலம் விட்டு, அதன் மூலம் நிதி திரட்டும் முயற்சியில் இறங்கியுள்ளது டெல்லி கேபிடல்ஸ் கிரிக்கெட் அணி.
நடப்பு ஐபிஎல் சீசனில் மூன்று போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணி. நோ-பால் சர்ச்சை, கரோனா பரவல் என அசாதாரண சூழலை கடந்து வந்துள்ளது டெல்லி அணி. லீக் போட்டிகளின் இரண்டாவது பாதியில் தங்களது அணி ஆதிக்கத்தை செலுத்தும் என தெரிவித்துள்ளார் அந்த அணியின் பயிற்சியாளர் ரிக்கி பான்டிங். இந்நிலையில், விளையாட்டு வீரர்களின் நலனுக்காக நிதி திரட்டுகிறது டெல்லி.
Comments
Post a Comment