World News
மாஸ்கோ: ரஷ்யா மீது ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ள நிலையில் தடையை தகர்க்க அந்நாட்டு அதிபர் புதின் புதிய வியூகத்தை வகுத்துள்ளார். நட்பற்ற நாடுகள் கச்சா எண்ணெய் அல்லது எரிவாயு வாங்க ரஷ்ய ரூபிள்களில் இனி பணம் செலுத்த வேண்டும் என அவர் அறிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த சில நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பல்வேறு பொருளாதாரத் தடைகளையும் விதித்துள்ளன. ரஷ்யாவுடன் வர்த்தக தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம் என்று உலக நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
Comments
Post a Comment