World News
டமாஸ்கஸ்: சவுதி அரேபியாவுடனான உறவில் நிறைய பிரச்சினைகளும், சவால்களும் உள்ளன. எனினும் சவுதியுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையை முன்னெடுக்கிறோம் என்று ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் அரசியல் ரீதியாக சிரியாவுக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார். இந்த நிலையில் அவரிடம் நிகழ்வு ஒன்றில் சவுதியுடனான ஈரானின் உறவு எவ்வாறு உள்ளது என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் கூறும்போது, “சவுதி அரேபியாவின் நடவடிக்கைகளால் அந்நாட்டுடனான உறவில் தொடர்ந்து பிரச்சினை ஏற்படுகிறது. மினாவில் சுமார் 460 ஈரானியர்கள் உயிரிழந்ததை நாங்கள் என்றும் மறக்க மாட்டோம். சவுதி அரேபியாவுடனான உறவில் நிறைய பிரச்சனைகளும், சவால்களும் இருந்து வருகின்றன. எனினும் சவுதியுடனான பேச்சுவார்த்தைக்கு ஈரான் தொடர்ந்து முயற்சித்து வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment