World News
ஏமனில் சவுதி கூட்டுப் படைகள் தற்காலிகமாக போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளன.
இதுகுறித்து அரபு செய்தி நிறுவனங்கள், “ இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதத்தில் அரசியல் பேச்சுக்களுக்கு வளமான சூழலை உருவாக்கவும், அமைதிக்கான முயற்சிகளைத் தொடங்கவும் ஏமனில் தற்காலிக போர் நிறுத்தத்தை சவுதி கூட்டுப் படைகள் அறிவித்துள்ளன.இந்தப் போர் நிறுத்தம் ஏமனில் அமைதி நிலவுவதற்காக அரசியல் ரீதியான பேச்சுவார்த்தையை ஊக்குவிக்கும் என்றும் சவுதி தெரிவித்துள்ளது. இந்தப் போர் நிறுத்தம் இன்று காலைமுதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. ” என்று செய்தி வெளியிட்டுள்ளன.
Comments
Post a Comment