World News
கீவ்: உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் தொடங்கி ஒரு மாதம் முடிந்துவிட்ட நிலையில், பொதுமக்களைக் குறிவைத்து தாக்கும் ரஷ்யப் படைகள் பாஸ்பரஸ் குண்டுகளைப் பயன்படுத்துவதாக அதிபர் ஜெலன்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளார். பாஸ்பரஸ் குண்டுகள் வெடித்து சிதறும்போது பொதுமக்களின் உடல்கள் வெந்து புண் ஆவதாகவும் அவர் வருத்தம் தெரிவித்தார். இச்சூழலில் நேட்டோ தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்கும், ரசாயன மற்றும் அணு ஆயுத எதிர்ப்பை வலுப்படுத்துமாறு கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு வலியுறுத்தியுள்ளார்.
ரஷ்யா அடுத்ததாக இன்னும் பல ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்த ஆயத்தமாகி வருவதால், அமெரிக்காவும் நேட்டோ நாடுகளும் தங்களுக்கு ஆயுதங்களுன், டேங்குகளும், போர் விமானங்களும் கொடுக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Comments
Post a Comment