Sports in Tamil
ஆக்லாந்து: மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் தோல்வி அடைந்த பின், ஓய்வு குறித்து இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் தெளிவுபடுத்தியுள்ளார்.
மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இருந்து இந்திய அணி வெளியேறியுள்ளது. கடைசி லீக் ஆட்டத்தில் தென்னாபிரிக்க அணியிடம் தோல்வி அடைந்து அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் இந்தியா வெளியேறியுள்ளது. இந்திய அணி கேப்டன் மிதாலி ராஜுக்கு இது கடைசி உலகக்கோப்பை ஆகும். 39 வயதாகும் அவர் இதுவரை மொத்தம் ஆறு உலகக் கோப்பைகளில் பங்கேற்றுள்ளார். இதன்மூலம் ஆறு உலகக் கோப்பைகளில் விளையாடிய ஒரே மகளிர் கிரிக்கெட் வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.
Comments
Post a Comment